Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் தமிழர் கட்சி பாசறை நிர்வாகி விலகல்

செப்டம்பர் 11, 2020 11:41

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி இருவர் மீதும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து
கட்சியில் இருந்து விலகுவதாக ராஜீவ்காந்தி அறிவித்தார்.

இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
பேராசிரியர் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளதாவது:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வணக்கம். கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராகவும், இளைஞர் பாசறையின் மாநில
ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான
அனுபவங்கள் காரணமாக இனிமேல் கட்சியில் தொடர முடியாத நிலையிலிருப்பதால், இக்கடிதம் மூலமாக எனது விலகலை அறிவிக்கிறேன். இந்த பயணத்தில் என்னோடு பேரன்போடும், உதவிகரமாகவும் பயணித்த அனைத்து உறவுகள், பொறுப்பாளர்கள் என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும், தங்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிப்பதோடு, எதிர்கால உங்கள் பயணம் பெரு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்